images 7 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின் எச்சரிக்கை: பாதணிகளை அணியுங்கள், எலிக்காய்ச்சல் குறித்து அவதானம் – GMOA அறிவுறுத்தல்!

Share

அனர்த்த நிலைமைக்குப் பிறகு வீடுகளுக்கு அருகில் காணப்படும் சகதி மற்றும் கழிவுநீர் உள்ள இடங்களில் செல்லும்போது பாதணிகளை அணிவதன் மூலம் தொற்றுநோய்களிலிருந்து விலகி இருக்க முடியும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டபோதே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

“அனர்த்த நிலைமைக்குப் பிறகு சகதி மற்றும் கழிவு நீர் உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாதணிகளை அணியுங்கள்,” என அவர் வலியுறுத்தினார்.

“நீங்கள் சகதி கலந்த நீருக்குள் செல்ல நேர்ந்தால், எலி காய்ச்சல் (Leptospirosis) தொடர்பாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட அதிக அபாய நிலையில் உள்ளவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வைத்தியர் சமல் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளம் வடிந்த பின்னரும் சுகாதார அபாயங்கள் நிலவுவதால், பொதுமக்கள் தனிநபர் சுகாதாரப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என GMOA வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...