6 33
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் முதியவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

Share

மன்னார்(Mannar) அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 68 வயது முதியவரால் 14 வயது சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த எட்டு மாத காலத்திற்கு மேலாக சிறுமியை மிரட்டியே தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் சிறுமி தனது பெற்றோருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தியபோதும் அவர்கள் இதுதொடர்பில் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலை ஆசிரியர் ஊடாக இந்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய முதியவரை கைது செய்துள்ளனர்.

குறித்த முதியவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கானது கடந்த 20.05.2025 அன்று நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதியவரை எதிர்வரும் 28.05.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...