6 33
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் முதியவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

Share

மன்னார்(Mannar) அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 68 வயது முதியவரால் 14 வயது சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த எட்டு மாத காலத்திற்கு மேலாக சிறுமியை மிரட்டியே தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் சிறுமி தனது பெற்றோருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தியபோதும் அவர்கள் இதுதொடர்பில் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலை ஆசிரியர் ஊடாக இந்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய முதியவரை கைது செய்துள்ளனர்.

குறித்த முதியவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கானது கடந்த 20.05.2025 அன்று நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதியவரை எதிர்வரும் 28.05.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...