இலங்கைசெய்திகள்

பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு

பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு
பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு
Share

பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதனை தொடர்ந்து கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்தார். கண்கள், வாய் எரிவதாக கூறிய சமோதி எழுந்து நீர் இடத்திற்கு சென்றுள்ளார்.

தனக்கே ஏதோ நடக்கப்போவதாக அவர் தாயிடம் கூறிய நிலையில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக வந்த தாதி அவரை மருத்துவமனை படுகைக்கு கொண்டு சென்றவுடன் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பலாம் என கூறப்பட்டதன் பின்னர் 2 ஊசிகள் ஏற்றப்பட்டதன் பின்னணி தொடர்பில் குழப்பமாக இருப்பதாக யுவதியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

இறுதியான தங்கையின் உடலை பார்க்கும் போது வயிற்று பகுதி வீக்கம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு எவ்வித உடல் உபாதைகளும் காணப்படவில்லை. ஊசியிலேயே மர்மம் உள்ளதென குடும்பத்தினர் குறிபபிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...