rtjy 76 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்

Share

வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்

வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார்.

குறித்த சிறுமியின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில் அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீ பாத கேபிள் கார் திட்டம்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என சிஇஏ விளக்கம்

ஸ்ரீ பாத (ஆதாம் சிகரம்) மலைத் தளத்தில் கேபிள் கார் திட்டத்தை அமைப்பதற்கு இதுவரை எந்தவிதமான...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் ஜூன் 30 முதல் தண்ணீர்க் கட்டணத் திருத்தம்: அமைச்சர் சுசில் ரணசிங்க தகவல்

இலங்கையில் தண்ணீர்க் கட்டணங்களின் அடுத்தக்கட்ட திருத்தம் வரும் ஜூன் மாதம் 30-ம் திகதி மேற்கொள்ளப்படும் என...

world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...