6ntdtd2v5FAp7V92QEgj
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்!

Share

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்!

அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர், நடிப்பதையும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் தமிழ் மக்கள் இனியும் கண்டுபிடிக்கமாட்டார்களென்று அரச எடுபிடி தமிழ் தலைமைகள் கருதினால், அது அவர்களின் முட்டாள்தனமே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று கனேடிய பிரதமர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது தொடர்பில் க.சுகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென்பதையும் 2010 முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

இதன்போது, தமிழ்த் தரப்புக்கள் அவற்றை மறுதலித்து, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்லவென்றும் அது வெறும் யுத்தக் குற்றமென்றும் இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்றும் கூறி தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தது.

தற்சமயம் கனேடியப் பிரதமரே “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை” என்று கூறியுள்ளதால், எங்கே தமது காட்டிக்கொடுப்புக்களைத் தமிழ் மக்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர் நடிப்பதையும் இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் வாக்குகளுக்காக முள்ளிவாய்க்காலுக்குச் சென்று விளக்கேற்றி வருவதையும் தமிழ் மக்கள் இனியும் கண்டுபிடிக்க மாட்டார்களென்று அரச எடுபிடித் தமிழ்த் தலைமைகள் கருதினால், அது அவர்களின் முட்டாள்தனமே.”என தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...