6 37
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு

Share

நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் (PC) மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (LG) முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட ‘இளம்’ வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மொட்டுவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச(namal rajapaksa),

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது இளம் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, 50 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் சிறப்புக் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜபக்ச தெரிவித்தார். “இந்த நியமனங்களைச் செய்வதில் இளைஞர் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்”என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...