25 5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை

Share

இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்றிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் இன்று முற்றாக மக்களால் வெறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட மாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது பெயர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெறவில்லை.

தேர்தலில் போட்டியிடாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தனது ஆதரவை வழங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலை பிரதேசத்திலும் நிப்புன ரணவக்க மாத்தரையிலும் போட்டியிடவுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோரின் பெயரும் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....