25 5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை

Share

இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்றிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் இன்று முற்றாக மக்களால் வெறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட மாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது பெயர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெறவில்லை.

தேர்தலில் போட்டியிடாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தனது ஆதரவை வழங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலை பிரதேசத்திலும் நிப்புன ரணவக்க மாத்தரையிலும் போட்டியிடவுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோரின் பெயரும் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...