tamilni 83 scaled
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு

Share

உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 9,904 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியரின் 63. 3 விதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் தகுதி கிடைக்க பெற்றுள்ளது.

உயிரியல் பிரிவில் 817 பேரும், பௌதிக விஞ்ஞான பிரிவில் 1068 பேரும், வர்த்தகப் பிரிவில் 4198 பேரும், கலை பிரிவில் 3622 பேரும், பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 90 பேரும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 73 பேரும் இவ்வாறு மூன்று ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு 263933 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர் எனவும் இதில் 166938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 2758 மாணவ மாணவியர் 3 பாடங்களிலும் சித்தி எய்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஆண்டு முதல் பரீட்சைகளை உரிய நேரத்திற்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...