rtjy 245 scaled
இலங்கைசெய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு

Share

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த பரீட்சைகள், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையால் உயர்தர பரீட்சையை நடத்துவதில் இடையூறுகள் ஏற்பட்டதால், இந்த வருடம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி உள்ளிட்ட உயர்கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

மாணவர்களின் பெறுபேறு
இந்நிலையில் பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆறு மாத காலத்துக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...