rtjy 245 scaled
இலங்கைசெய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு

Share

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த பரீட்சைகள், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையால் உயர்தர பரீட்சையை நடத்துவதில் இடையூறுகள் ஏற்பட்டதால், இந்த வருடம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி உள்ளிட்ட உயர்கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

மாணவர்களின் பெறுபேறு
இந்நிலையில் பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆறு மாத காலத்துக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...