24 6631a7ab2d70f
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அறிவிப்பு

Share

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அறிவிப்பு

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மழையினால் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழை பெய்து வருவதால் மாணவர்கள் தேர்வு மத்திய நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இந்த வருடம் 459,979 பரீட்சார்த்திகள் பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பொதுப் பரீட்சை தொடர்பான பயிற்றுவிப்பு வகுப்புகள் உட்பட அனைத்து பயிலரங்குகளும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக எவரேனும் அல்லது நிறுவனமோ செயற்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...