25 6838fd3acddfc
இலங்கைசெய்திகள்

ஆடைத்தொழிற்சாலை மூடப்படுவது சாதாரண விடயமே

Share

ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படுவது சாதாரண விடயமே என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் விவாதமொன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்ட விவகாரம் தேவையற்ற வகையில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதும் திறக்கப்படுவதும் சாதாரண விடயமே இதனை தேவையின்றி அரசியல் மயப்படுத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களின் தீர்மானத்திற்கு அமையே இந்த நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் கடந்த ஆண்டிலும் கொக்கல பகுதியில் ஆடைத்தொழிற்சாலையொன்று மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதனால் முதலீடுகள் வெளியே செல்வதாக கருதப்பட முடியாது எனவும் நிறுவனங்கள் வியாபார ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் மூடப்படுவதாகவும் லக்மாலி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...