20 14
இலங்கைசெய்திகள்

யாழில் பூட் சிற்றிகளில் திருடும் கும்பல் : காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

Share

யாழில் பூட் சிற்றிகளில் திருடும் கும்பல் : காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) நகர் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கு மூவர் அடங்கிய குழுவாக சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

இக் குழு தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...