tamilnid 3 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல்

Share

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல்

குருணாகல், வாரியபொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடொன்றிற்குள் புகுந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரொம்புவ, பத்ராவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு சிலர் வெள்ளை வேனில் வந்து, தாங்கள் பண்டாரகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் எனவும், வீட்டை சோதனையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் பின்னர் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றபோது வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

சம்பவத்தின் போது ஊனமுற்ற தாயும் தானும் மட்டுமே வீட்டில் இருந்ததாக வீட்டின் உரிமையாளரான பெண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...