12 31
இலங்கைசெய்திகள்

செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் முன்கூட்டியே அறிந்திருந்த ரகசியம் – பொலிஸார் தகவல்

Share

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அவர் நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடிய அனைத்து கடல் வழிகள் மற்றும் விமான நிலைய வழிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா , கடுவெல பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொலைக்குத் தேவையான துப்பாக்கியை, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில், சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரருக்கும் இந்தக் கொலை குறித்துத் தெரியும் எனவும், அதற்கு முன்னர் அவர்கள் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரரை குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று இரவு கைது செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபரான இஷார செவ்வந்தி, ஹெராயின் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...