1 54
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! முதல் நாள் செவ்வந்தி வாங்கிய சிம் அட்டை

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! முதல் நாள் செவ்வந்தி வாங்கிய சிம் அட்டை

பொலிஸாரால் தற்போது தேடப்பட்டு வரும் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற பெண் தனது பெயரில் சிம் அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முதல் நாள் இந்த சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கடுவெல – வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் இருந்து இந்த சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை, சட்டத்தரணி வேடத்தில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் நீதிமன்ற கூண்டிற்குள் வைத்து சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

குறித்த துப்பாகிதாரியும், அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் செவ்வந்தி என்ற பெண்ணும், துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியிலேயே செவ்வந்தி என்ற பெண்ணின் பெயரில் சிம் அட்டை ஒன்று கொள்வனவு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த சிம் அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

திகதி துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன்னர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னர் தற்போது காணாமல் போன பெண், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்னர் கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

19 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள், அந்தப் பெண்ணும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

கடையில் இருந்தபோது அங்கு வந்த பெண் தனது பெயரில் இந்த சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட துப்பாகிதாரியை இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சில செய்திகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...