12 33
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

பாதாள உலகக் குழு தலைவர்களான கணேமுல்ல சஞ்சவீவவின் தரப்பினருக்கும், துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் தரப்பினருக்கும் இடையில் தற்போது மோதல் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்கள், மோதல்கள் குறித்து பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இந்த மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவினருக்கும், தற்போது துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருக்கும் இடையே இந்த மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணியில் கெஹல்பத்தர பத்மே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பத்மேவின் தந்தையின் கொலைக்கு கணேமுல்ல சஞ்சீவதான் காரணம் என்றும் இதற்காக பழிவாங்கும் நோக்கில் சஞ்சீவவை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், கெஹல்பத்தர பத்மே என்ற பெயரைப் பயன்படுத்தி பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்த லஹிரு ரந்தீர் காஞ்சன மீது நேற்றையதினம் மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் துபாயில் இருக்கும் கெஹல்பத்தர பத்மேவின் நீண்ட கால நண்பர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணேமுல்ல சஞ்சீவ தரப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரமடைந்துள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...