இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

Share
12 33
Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

பாதாள உலகக் குழு தலைவர்களான கணேமுல்ல சஞ்சவீவவின் தரப்பினருக்கும், துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் தரப்பினருக்கும் இடையில் தற்போது மோதல் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்கள், மோதல்கள் குறித்து பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இந்த மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவினருக்கும், தற்போது துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருக்கும் இடையே இந்த மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணியில் கெஹல்பத்தர பத்மே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பத்மேவின் தந்தையின் கொலைக்கு கணேமுல்ல சஞ்சீவதான் காரணம் என்றும் இதற்காக பழிவாங்கும் நோக்கில் சஞ்சீவவை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், கெஹல்பத்தர பத்மே என்ற பெயரைப் பயன்படுத்தி பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்த லஹிரு ரந்தீர் காஞ்சன மீது நேற்றையதினம் மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் துபாயில் இருக்கும் கெஹல்பத்தர பத்மேவின் நீண்ட கால நண்பர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணேமுல்ல சஞ்சீவ தரப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரமடைந்துள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...