12 33
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

பாதாள உலகக் குழு தலைவர்களான கணேமுல்ல சஞ்சவீவவின் தரப்பினருக்கும், துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் தரப்பினருக்கும் இடையில் தற்போது மோதல் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்கள், மோதல்கள் குறித்து பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இந்த மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவினருக்கும், தற்போது துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருக்கும் இடையே இந்த மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணியில் கெஹல்பத்தர பத்மே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பத்மேவின் தந்தையின் கொலைக்கு கணேமுல்ல சஞ்சீவதான் காரணம் என்றும் இதற்காக பழிவாங்கும் நோக்கில் சஞ்சீவவை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், கெஹல்பத்தர பத்மே என்ற பெயரைப் பயன்படுத்தி பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்த லஹிரு ரந்தீர் காஞ்சன மீது நேற்றையதினம் மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் துபாயில் இருக்கும் கெஹல்பத்தர பத்மேவின் நீண்ட கால நண்பர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணேமுல்ல சஞ்சீவ தரப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரமடைந்துள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...