23
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை : மேலும் இருவர் கைது

Share

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை (Ganemulla Sanjeewa) படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்காக உதவி மற்றும் ஆதரவு வழங்கியதற்காக குறித்த சந்தேக நபர்களை நேற்று (28) மினுவாங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கி பிரதான சந்தேகநபர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய உதார நிர்மால் குணரத்ன மற்றும் 31 வயதுடைய நளின் துஷ்யந்த என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதியன்று புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அதன்படி, இதுவரை இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...