இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை : மேலும் இருவர் கைது

Share
23
Share

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை (Ganemulla Sanjeewa) படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்காக உதவி மற்றும் ஆதரவு வழங்கியதற்காக குறித்த சந்தேக நபர்களை நேற்று (28) மினுவாங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கி பிரதான சந்தேகநபர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய உதார நிர்மால் குணரத்ன மற்றும் 31 வயதுடைய நளின் துஷ்யந்த என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதியன்று புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அதன்படி, இதுவரை இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...