25 67b98949f2b6b 1
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையை முன்பே அறிந்திருந்த காவல்துறை! வெளியான தகவல்

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையை முன்பே அறிந்திருந்த காவல்துறை! வெளியான தகவல்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே அவரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனினும், அவர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்படுவார் என தகவல் கிடைக்கவில்லை என்றும் கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் மாத்திரமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை அங்கு முன்னிலைப்படுத்தவில்லை என்றும் பதில் காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, தகவல் கிடைத்தவுடன், கம்பஹா பிரிவு பொறுப்பதிகாரியிடம், நீதிபதிக்கு தகவல் தெரிவிக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்யவும், மெய்நிகர் முறையில் சாட்சியங்களை வழங்க அனுமதிக்க பேசியதாகவும் அன்றையதினம் சஞ்சீவ நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவத்துள்ளார்.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...