8 20
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய உதய கம்மன்பில

Share

அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய எஸ்.ஐ. இமாம் மற்றும் ஏ.என்.ஜே டி அல்விஸ் அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழு நாட்களுக்குள் இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தவறினால் தாம் அவற்றை வெளியிடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் அநுர பானத்தில் மயக்கத்தில் இருக்கும் மக்களின் மயக்கம் தெளியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் சில பக்கங்களைக் காணவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார்.

இந்த அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போகவில்லை எனவும் அழிக்கப்படவில்லை எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...