8 20
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய உதய கம்மன்பில

Share

அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய எஸ்.ஐ. இமாம் மற்றும் ஏ.என்.ஜே டி அல்விஸ் அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழு நாட்களுக்குள் இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தவறினால் தாம் அவற்றை வெளியிடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் அநுர பானத்தில் மயக்கத்தில் இருக்கும் மக்களின் மயக்கம் தெளியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் சில பக்கங்களைக் காணவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார்.

இந்த அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போகவில்லை எனவும் அழிக்கப்படவில்லை எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...