5 7 scaled
இலங்கைசெய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஐ.பி.சி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சுகாஷ், அவர் அவுஸ்திரேலியாவில் சாதாரண மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்மொழிந்திருந்தார்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு 3 மாத கால விடுமுறை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதன் காரணமாக அவருக்கு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அவர் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது கட்சித் தலைவரின் நோய் நிலைமை தொடர்பில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

சாதாரண மருத்துவ சிகிச்சைகளுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதாகவும் அடுத்த மாதம் அவர் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் தொடர்ந்தும் செயல்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....