5 7 scaled
இலங்கைசெய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஐ.பி.சி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சுகாஷ், அவர் அவுஸ்திரேலியாவில் சாதாரண மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்மொழிந்திருந்தார்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு 3 மாத கால விடுமுறை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதன் காரணமாக அவருக்கு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அவர் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது கட்சித் தலைவரின் நோய் நிலைமை தொடர்பில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

சாதாரண மருத்துவ சிகிச்சைகளுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதாகவும் அடுத்த மாதம் அவர் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் தொடர்ந்தும் செயல்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...