5 7 scaled
இலங்கைசெய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஐ.பி.சி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சுகாஷ், அவர் அவுஸ்திரேலியாவில் சாதாரண மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்மொழிந்திருந்தார்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு 3 மாத கால விடுமுறை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதன் காரணமாக அவருக்கு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அவர் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது கட்சித் தலைவரின் நோய் நிலைமை தொடர்பில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

சாதாரண மருத்துவ சிகிச்சைகளுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதாகவும் அடுத்த மாதம் அவர் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் தொடர்ந்தும் செயல்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...