இலங்கைசெய்திகள்

உயிரிழந்த தாயின் இறுதிக்கிரியைகள் நேற்று: பல்கலையில் இன்று பரீட்சை எழுதும் மகள்

Share
2 39
Share

உயிரிழந்த தாயின் இறுதிக்கிரியைகள் நேற்று: பல்கலையில் இன்று பரீட்சை எழுதும் மகள்

திடீர் வாகன விபத்தில் உயிரிழந்த தாயாரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையில் மகள் இன்று (30) கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு இறுதிப்பரீட்சையை எழுதும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய குருநாகல், பொல்பிதிகம பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான நிரோஷா தமயந்தி கடந்த 28ஆம் திகதி இரவு விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் மூத்த மகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்விகற்று வரும் நிலையில், இன்று (30) இறுதிப்பரீட்சை இடம்பெறவுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி காலை வேலையை முடித்துவிட்டு, பல்கலைகழக பரீட்சை எழுதும் மகளுக்கு இனிப்புகள் செய்து கொடுப்பதற்காக வீடு திரும்பிய போதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில், மகளின் பரீட்சை நிமித்தம் நேற்று (29) திகதி இறுதிக்கிரியை மேற்கொள்ள உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கமைய, உயிரிழந்த தாயின் இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (29) கொருவை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...