இலங்கைசெய்திகள்

பிரமிட் நிதி மோசடி! தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு!

Share
தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு
Share

தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு!

ஹம்பாந்தேட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரை மாய்த்துள்ளார்.

கரஸ்முல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையின் விளையாட்டு அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த ஆசியரே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளார்.

இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரைத் தேடியபோது, ​​விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை அதிபர் கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதிபர் கரஸ்முல்லை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் பொலிஸார் சென்று சடலத்தை அகற்றியுள்ளனர்.

இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன்னர் உயிரை மாய்க்கப் போவதாக சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பலன் கிடைக்காவிட்டால் உயிரை மாய்க்கவுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் தெரிய வருகிறது.

அவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலீடு செய்திருப்பது அவரது மனைவி அல்லது உறவினர்களுக்கு தெரியாது. இது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பலர் இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணத்தை முதலீடு செய்த பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் ஆலோசனையின் பேரில் கரஸ்முல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...