தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு
இலங்கைசெய்திகள்

பிரமிட் நிதி மோசடி! தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு!

Share

தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு!

ஹம்பாந்தேட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரை மாய்த்துள்ளார்.

கரஸ்முல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையின் விளையாட்டு அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த ஆசியரே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளார்.

இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரைத் தேடியபோது, ​​விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை அதிபர் கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதிபர் கரஸ்முல்லை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் பொலிஸார் சென்று சடலத்தை அகற்றியுள்ளனர்.

இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன்னர் உயிரை மாய்க்கப் போவதாக சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பலன் கிடைக்காவிட்டால் உயிரை மாய்க்கவுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் தெரிய வருகிறது.

அவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலீடு செய்திருப்பது அவரது மனைவி அல்லது உறவினர்களுக்கு தெரியாது. இது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பலர் இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணத்தை முதலீடு செய்த பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் ஆலோசனையின் பேரில் கரஸ்முல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...