14 3
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

Share

தற்போதைய கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இணங்கியுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச (Kumar Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கழிவு கொடுப்பனவு சூத்திரத்தில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வதற்குப் பரிந்துரை முன்வைக்கப்படுமாயின் அது தொடர்பாக ஆராயப்படும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (04) நடைபெற்றது.

கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) முன்வைத்த புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்திருந்தார்.

மேலும் விநியோகஸ்தர்கள் சமர்ப்பித்த திட்டங்களை மறுஆய்வு செய்ய மார்ச் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...