5 2
இலங்கைசெய்திகள்

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இன்று முதல் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வாரம் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் கூறியதை மறுத்துள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், வெள்ளிக்கிழமை முதல் எந்த எரிபொருள் ஓர்டர்களும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (02.28) காலை 10 மணிக்கு முன்பு 1,581 ஓர்டர்கள் கிடைக்கப்பெற்றதாக சங்கம் ஒப்புக்கொண்ட போதும் அதன் பிறகு புதிய ஓர்டர்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு திங்கள்கிழமை வரை நீடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வார இறுதியில் சில எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் பெற்றிருந்தாலும், பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங்களிடம் இருப்பு இல்லை என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய பிறகு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட்டன, ஆனால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடனில் எரிபொருள் வழங்கப்படாது என விநியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...