24 663080bb59c21
இலங்கைசெய்திகள்

குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

Share

குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், பொது மக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் லொறிகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் டீசலின் விலை கடந்த இரண்டு விலை திருத்தங்களில் 46 ரூபாவால் குறைந்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 363 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மே 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 333 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை மேலும் 16 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி, புதிய விலை 317 ரூபாவாகும், கடந்த இரண்டு விலை திருத்தங்களிலும் டீசலின் விலை 46 ரூபாவால் குறைக்கப்பட்டதால் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...