25 678e0df5b195c
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Share

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை விரைவில் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறை – கட்டுகருந்தவில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு சிறிது எடுக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கடனை திறைசேரி உள்வாங்கிய பிறகு எரிபொருளுக்கு ஒரு பாரிய வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திறைசேரி உள்வாங்கியுள்ளதாகவும், அந்தக் கடனை வசூலிப்பதாற்காகவே எரிபொருளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், கடனை அடைக்கும் வரையில் எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்காக கடன் செலுத்தும் காலத்தை விரைவில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க நிதி அமைச்சு, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...