19
இலங்கைசெய்திகள்

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

Share

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீட்டரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.

379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.

355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படா நிலையில் ஒரு லீட்டர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதற்கமைய ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட விலை ஒகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.

அதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 379 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 202 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...