19
இலங்கைசெய்திகள்

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

Share

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீட்டரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.

379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.

355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படா நிலையில் ஒரு லீட்டர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதற்கமைய ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட விலை ஒகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.

அதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 379 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 202 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...