rtjy 19 scaled
இலங்கைசெய்திகள்

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை!

Share

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை!

புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்வேறு நாடுகளில் இருந்து வருகைத் தந்து எமது மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.

நிவாரணம் வழங்குவதாக கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களை அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் நிறுவனங்களுடன் இரகசிய டீல் வைத்த பின்னர் அவர்கள் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். தேவையான அளவில் விலையை அதிகரித்து தருகின்றோம். நீங்கள் விரும்பிய விலைக்கு விற்பனை செய்து அதில் எமக்கு பாதியை வழங்குங்கள் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த சூட்சுமத்தை 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இது ஊழல் மிகு டீல் ஆகும்.

பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் நண்பர்களின் மற்றும் உறவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது. இவை அனைத்தும் கறுப்பு பணம். மக்களுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் கவலையடைவதில்லை. அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...