Sequence 02.00 00 21 02.Still021 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை

Share

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை

ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். அதன் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர், செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் இடம்பெறும்.

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை: அமைச்சர் எச்சரிக்கை | Fuel Crisis In Sri Lanka

வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாட்டை 2048வரை கொண்டுசெல்ல தேசிய கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச்செல்ல ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல் போகும்.

நாட்டை முன்னெடுத்துச்செல்ல முடியுமான வழிகாட்டலை ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார். இந்த வழியை தவிர வேறு வழி இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே நாட்டில் அடுத்து இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிப் பரந்துபட்ட கூட்டணியை அமைக்க இருக்கிறோம். அதில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேசிய தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருளுக்காக மக்கள் மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும். அந்த பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைவரும் ஒரு தேசமாக ஒன்று திரளவேண்டும்.

இந்த விடயத்தில் நாங்கள் இந்தியாவை முன்மாதிரியாகக்கொள்ள வேண்டும். அவர்கள் அரசியல் ரீதியில் பிளவுபட்டிருந்தாலும் தேசம் என்று வரும்போது ஒரு கொள்கையில் பிளவுபடாமல் இருக்கின்றனர்.

மேலும் அன்று டொலரின் பெறுமதி அதிகரிக்கும்போது பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொணடே சென்றது. அப்பாேது ஊடகங்களும் பாரியளவில் பிரசாரம் வழங்கி வந்தன. ஆனால் தற்போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பொருட்களின் விலையும் குறைவடைந்து வருகிறது. ஆனால் அது தொடர்பில் ஊடகங்களின் பிரசாரம் குறிப்பிடத்தக்களவில் இல்லை.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு பொருளாதார ரீதியில் இருந்த நிலையை தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால், எந்தளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை எங்களுக்கு உணர்ந்துகொள்ள முடியும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...