13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

Share

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், தனியாகப் பிரிந்து வந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியொன்றை ஆரம்பித்தார்.

அக்கட்சி இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், வாக்களிப்பின் பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்து கேகாலை மாநகர சபைக்கு ஒரு மக்கள் பிரதிநிதி தெரிவாகியள்ளார்.

கேகாலை மாநகர சபைக்கான தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி 272 வாக்குகளைப் பெற்று இந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் கேகாலை மாநகர சபையில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்கு தேர்தல் மூலம் முதலாவது மக்கள் பிரதிநிதி தெரிவாகியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...