13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

Share

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், தனியாகப் பிரிந்து வந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியொன்றை ஆரம்பித்தார்.

அக்கட்சி இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், வாக்களிப்பின் பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்து கேகாலை மாநகர சபைக்கு ஒரு மக்கள் பிரதிநிதி தெரிவாகியள்ளார்.

கேகாலை மாநகர சபைக்கான தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி 272 வாக்குகளைப் பெற்று இந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் கேகாலை மாநகர சபையில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்கு தேர்தல் மூலம் முதலாவது மக்கள் பிரதிநிதி தெரிவாகியுள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...