19 3
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – பின்னணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Share

தென்னிலங்கையில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம, வாடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக பிரதான சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபெலேன பிந்து என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபரும், மேலும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை சம்பவம் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 28 வயதான இமேஷா மதுபாஷினி மற்றும் அவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த போபசிந்து என அழைக்கப்படும் 28 வயதான பசிந்து ஹேஷன் என்பவர்களாகும்.

இருவரும் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளில் வசிப்பவர்களாகும். ஹுங்கம வாடிகல பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். மேலும் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்கிய பிரான சந்தேக நபரான அதுபெலேன பிந்து மற்றும் கொலை செய்யப்பட்ட பசிந்து ஆகியோர் சிறிது காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பசிந்து ஏற்கனவே கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மீன்பிடி படகின் உரிமையாளரை கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஹுங்காம பொலிஸார் மற்றும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...