17 20
இலங்கைசெய்திகள்

கண்டியில் தோளில் சுமந்து கொண்டு வந்த நண்பன் மரணம் – தப்பியோடிய நபர்

Share

கண்டியில் தோளில் சுமந்து கொண்டு வந்த நண்பன் மரணம் – தப்பியோடிய நபர்

கண்டி, பிரிம்ரோஸ் கார்டன் பகுதியின் கீழ் பகுதியில் வீதியில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கண்டி பிரிம்ரோஸ் பார்க் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அவர் தனது வீட்டிற்கு அருகில் நண்பர் ஒருவருடன் ஹெரோயின் பயன்படுத்தும் போது, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

இதையடுத்து, நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக மற்றுமொருவர் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

 

இடைநடுவில் குறித்த நபர் உயிரிழந்தை அறிந்ததும், உயிரிழந்தவரின் சடலத்தை வீதியிலேயே விட்டுவிட்டு நண்பன் தப்பியோடியுள்ளார்.

 

தப்பி ஓடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், அவரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...