17 20
இலங்கைசெய்திகள்

கண்டியில் தோளில் சுமந்து கொண்டு வந்த நண்பன் மரணம் – தப்பியோடிய நபர்

Share

கண்டியில் தோளில் சுமந்து கொண்டு வந்த நண்பன் மரணம் – தப்பியோடிய நபர்

கண்டி, பிரிம்ரோஸ் கார்டன் பகுதியின் கீழ் பகுதியில் வீதியில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கண்டி பிரிம்ரோஸ் பார்க் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அவர் தனது வீட்டிற்கு அருகில் நண்பர் ஒருவருடன் ஹெரோயின் பயன்படுத்தும் போது, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

இதையடுத்து, நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக மற்றுமொருவர் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

 

இடைநடுவில் குறித்த நபர் உயிரிழந்தை அறிந்ததும், உயிரிழந்தவரின் சடலத்தை வீதியிலேயே விட்டுவிட்டு நண்பன் தப்பியோடியுள்ளார்.

 

தப்பி ஓடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், அவரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...