3 1 6
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

Share

விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த உர விநியோகம் இன்று(19) நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ரமேஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டது மேலும் நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.

12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (18) கமநல சேவை நிலையத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேச கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 2613 விவசாயிகள் இவ் இலவச மானிய பசளையை பெற தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக கிண்ணியா கமல சேவை நிலையத்துக்கு 50 கிலோ நிறையுடைய 2339 பொதிகளுடைய பசளைகள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களின் முன்னுரிமை அடிப்படையில் பசளைகள் விநியோகப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...