3 1 6
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

Share

விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த உர விநியோகம் இன்று(19) நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ரமேஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டது மேலும் நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.

12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (18) கமநல சேவை நிலையத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேச கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 2613 விவசாயிகள் இவ் இலவச மானிய பசளையை பெற தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக கிண்ணியா கமல சேவை நிலையத்துக்கு 50 கிலோ நிறையுடைய 2339 பொதிகளுடைய பசளைகள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களின் முன்னுரிமை அடிப்படையில் பசளைகள் விநியோகப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...