6 54
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள உரமானியம்

Share

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள உரமானியம்

இதுவரை காலமும் உர மானியம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, எதிர்வரும் சில நாட்களில் அந்நிதி நிச்சயம் வழங்கப்படும் என விவசாயம், கால்நடை வளம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (18) நாடாளுமன்றத்தில் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

உர மானியம் தொடர்பாகக் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த போகத்தில் தீர்க்கப்படும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாயிகளை அரசர்களாக்கும் யுகமொன்றை நிச்சயமாக உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்க விவசாய நிலங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கும் எவ்வித தீர்மானமும் கொண்டுவரவில்லை எனவும் பிரதி அமைச்சர் வலியுருத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் விவசாய நிலங்கள் நாட்டிலிருந்து பறிக்கும் நடவடிக்கைகள் எச்சந்தர்ப்பத்திலும் எடுக்கப்படமாட்டாது என்றும், அரசங்கத்தின் இணக்கப்பட்டின் விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்புத் தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அனைத்து விளைநிலங்களும் வளமானதாகவும் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும் அத்துடன் அதற்கு அரசாங்கம் தலையிடும் எனவும் பிரதியமைச்சர் விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...