பமுணுகம, சேதவத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக மூத்த சகோதரரே இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சேதவத்த பகுதியில் தடியால் பலத்த தாக்குதலுக்குள்ளான குறித்த நபர், பமுணுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கம்புருகமுவ, ஊதுடல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதன் காரணமாக இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
கொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 36 வயதுடைய மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். பமுணுகம பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.