16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

Share

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 செப்டம்பர் 9 ஆம் திகதியன்று பிரான்ஸின் 47ஆவது பிரதமராக இவர் நியமிக்கப்பட்டு 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பிறகு பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குள் பிரான்சின் ஐந்தாவது பிரதமராக லெகோர்னு பதவியேற்றார்.

2024 ஆம் ஆண்டு மக்ரோனால் நடத்தப்பட்ட திடீர் தேர்தல்கள் முடிவில்லாததால், எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் நாடு அரசியல் ரீதியாக முடங்கிப் போனது.

தேர்தல்களுக்குத் திரும்பாமல், தேசிய சட்டமன்றம் கலைக்கப்படாமல், ஸ்திரத்தன்மைக்குத் திரும்ப முடியாது என்று லெகோர்னு பதவி விலகிய பின்னர் தேசிய பேரணித் தலைவரிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...