16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

Share

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 செப்டம்பர் 9 ஆம் திகதியன்று பிரான்ஸின் 47ஆவது பிரதமராக இவர் நியமிக்கப்பட்டு 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பிறகு பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குள் பிரான்சின் ஐந்தாவது பிரதமராக லெகோர்னு பதவியேற்றார்.

2024 ஆம் ஆண்டு மக்ரோனால் நடத்தப்பட்ட திடீர் தேர்தல்கள் முடிவில்லாததால், எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் நாடு அரசியல் ரீதியாக முடங்கிப் போனது.

தேர்தல்களுக்குத் திரும்பாமல், தேசிய சட்டமன்றம் கலைக்கப்படாமல், ஸ்திரத்தன்மைக்குத் திரும்ப முடியாது என்று லெகோர்னு பதவி விலகிய பின்னர் தேசிய பேரணித் தலைவரிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...

20 1
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை...