18 1
இலங்கைசெய்திகள்

முள்ளியவளையில் சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய மேலும் நால்வர் கைது

Share

முள்ளியவளையில் சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய மேலும் நால்வர் கைது

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் 59 வயதுடைய நபர் ஒருவரை கடந்த 28.05.2024 அன்று முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவியின் கர்ப்பம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் கேப்பாபிலவினை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, மாணவியின் வாய் முறைப்பாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கமைய, நேற்றையதினம் (11.06.2024) 16,17 மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கேப்பாபிலவினை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஜஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அதில் இருவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் 16 வயதுடைய பாடசாலை சிறுவனை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள சிறுவர் நன்நடத்தை இல்லத்திற்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...