யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் பயணிகள் முனையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்!

Share

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையக் கட்டிடம் (Passenger Terminal Building) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) மதியம் சர்வமத வழிபாடுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவத் தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கைப் விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கல்லை நாட்டினர்.

இந்தக் கட்டுமானப் பணிகளின் கட்டம் 02 (Phase 02) ஜனவரி 2026 இல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீடு ஏறத்தாழ 700 மில்லியன் ரூபாய்கள் ஆகும் என சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

புதிய முனையக் கட்டடம் செயல்பாட்டுக்கு வரும்போது, யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பயணிகள் சேவைகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...