8 46
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்

Share

அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்

சர்வதேச நாணய நிதியம்(imf) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(sehan semasinghe), தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 3 வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது. “இந்த வெற்றியானது பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் நான்காவது தவணை நிதி உதவியை திறப்பதற்கு வழி வகுக்கிறது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான காலப்பகுதியானது, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை சந்திப்பது மட்டுமன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை தாண்டியதுடன், பல துறைகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.

பொருளாதாரத்தை புத்துயிர் அடையச் செய்வதற்காக நாங்கள் அறிமுகப்படுத்திய EFF திட்டமானது, தற்போதைய அரசால் முதலில் எதிர்க்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டின் சவால்களை சந்திப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒழுக்கமான கட்டமைப்பை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...