8 46
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்

Share

அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்

சர்வதேச நாணய நிதியம்(imf) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(sehan semasinghe), தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 3 வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது. “இந்த வெற்றியானது பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் நான்காவது தவணை நிதி உதவியை திறப்பதற்கு வழி வகுக்கிறது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான காலப்பகுதியானது, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை சந்திப்பது மட்டுமன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை தாண்டியதுடன், பல துறைகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.

பொருளாதாரத்தை புத்துயிர் அடையச் செய்வதற்காக நாங்கள் அறிமுகப்படுத்திய EFF திட்டமானது, தற்போதைய அரசால் முதலில் எதிர்க்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டின் சவால்களை சந்திப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒழுக்கமான கட்டமைப்பை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...