முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல (Asoka Ranwala), நேற்று (டிசம்பர் 11) இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்துச் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட அவர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

